சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்று தாயத்து கட்டியிருப்பார்கள். அதற்கான காரணத்தை நம் தாத்தா பாட்டிகளிடம் கேட்டால் திருஷ்டிக்காக கட்டுவோம் என்பார்கள். ஆனால் இந்த தாயத்துக்குப்பின் இருக்கும் நோய் தீர்க்கும் மருத்துவம் நிறைந்த அறிவியலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இன்றைய சில தனியார் மருத்துவமனைகள் பிறந்த குழந்தையின் stem cell ஐ அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. மேலும் அந்த தொப்புள்கொடியை சேமிக்க சில லட்சங்கள் வரை வசூலிக்கவும் செய்கிறார்கள். தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.
பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள்.
இவ்வளவு சத்துவாய்ந்த இந்த பொடி எப்பேர்பட்ட நோயையும் குணமாக்கும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. Stem cell மூலம் ஏப்பேர்பட்ட நோயையும் குணப்படுத்திவிடலாம் என இன்றைய வெளிநாட்டு கண்டுபிடிப்புகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து அதை பயன்படுத்தியும் காட்டியவன் தமிழன். இத்தகைய நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.
சிந்திப்போம் இனியாவது விழிப்போம்.
x
No comments:
Post a Comment