Tuesday, June 12, 2012

முகத்தில் வழியும் எண்ணெய்க்கு முற்றுப்புள்ளி..


வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழி வதை தடுக்கலாம் . வெள்ளரிச் சாற்றுடன், பால்பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக_காணப்படும் இதைதொடர்ந்து ஒருமாத காலமாவது பின்பற்றவேண்டும்.

தக்காளி பழத்தை நன்குபிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்தபின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டு படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் (அ) ஓட்ஸ்சேர்த்து அரைத்து முகத்தில்பூசி இருபது நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் பால் மற்றும் கேரட்துருவலை கலந்து முகத்தில் தடவி வந்தால் , அதிகமாக எண்ணெய் வழிவது கட்டுப்படும் . எண்ணெய் பசையுடன் கூடிய சருமத்தை உடையவர்கள் , அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். முகம் கழுவ சோப்பிற்குபதில் கடலை மாவு பயன் படுத்தலாம்.

No comments:

Post a Comment