Friday, February 22, 2013

நலம் தரும் நெல்லிக்காய் ஜூஸ்



கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது. (ஜில்லுன்னு குடிங்க!)

கண் பார்வை அதிகரிக்கும். நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். (இளமைக்கு கியாரண்டி!)

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். (ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே என்று பாடலாம்!)

தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூல் குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து விடும். (உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆகிடுங்க!)

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். (சூப்பர், சூப்பர்!)

நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. (ட்ரை பண்ணிப் பாருங்களேன்!)

No comments:

Post a Comment