நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது.
கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக நமக்கு தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் நாம் பருகுவோம். பொதுவாகவே நம் பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது உடலை குளிர்விக்க அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன.
அவ்வாறு உடலில் நீர்க்குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் ஒரு வகை உணர்வு (தகவல்) தான் ‘தாகம்’ ஆகும்.மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus).இதில் மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான்.
தாகம் எடுக்கின்றபோது மிக குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக் கூடாது. காரணம், குளிர்ந்த பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அதிகப்படியான [Fridge water] குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் குறுகுகின்றன.நரம்புகளும் மரத்துப்போய் தாக உணர்ச்சியை மூளைக்கு கடத்த தவறுகின்றன.எனவே நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடுகிறது.மேலும் குளிர்ந்த நீர் தொண்டை திசுக்களின் எதிர்ப்பு சக்தியையும் குறைப்பதால் கிருமி தொற்று உண்டாகி "சளி" பிடிக்கிறது.ஆகவே மிக குளிர்ந்த நீருடன் பாதியளவு சாதாரண சுத்தமான தண்ணீரை கலந்து குடிப்பதே சிறந்தது.
தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள்.
ஆரோக்கியமாக வாழுங்கள்.
No comments:
Post a Comment