Tuesday, March 19, 2013

தலைமுடி உதிர்வுக்கான 3 காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்


ரத்தசோகை:
ரத்த சோகை காரணமாக முடி உதிர்கிறது எனத் தெரிந்தால், அத்திப் பழம், பேரீச்சைப் பழம், இரும்புச் சத்து மருந்துகள், கரிசாலைக் கற்பக மாத்திரை இவற்றை உட்கொள்வதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்.

புரதச் சத்துக் குறைபாடு:
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புரதச்சத்து குறைபாடு ஏற்படும். இதனாலும் முடி உதிர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க, முட்டையின் வெள்ளைக்கரு, மீன் எண்ணெய் மாத்திரைகள், கேரட்,கரு வேப்பிலைப் பொடி தினம் ஒரு தேக்கரண்டி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்

மன அழுத்தம்:
அமுக்கரா அல்லது அஸ்வசுந்தா மருந்துகள் சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும். இவற்றைப் உட்கொண்டால், மன அழுத்தம் குறையும். தியானம், யோகா செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். தலைமுடி உதிர்வையும் தடுக்கும்.

No comments:

Post a Comment