Monday, February 29, 2016

வீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேபி பவுடர்!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய உலர்ந்த செண்பகப் பூ, மகிழம் பூ, பன்னீர் ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து, சிகப்பு சந்தனம் (Red Sandal) அனைத்தையும், சம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
அதிக அளவு தேவையெனில் மாவு மெஷினிலும், குறைந்த அளவை வீட்டில் மிக்ஸியிலேயே பொடி செய்துகொள்ளலாம்.

தரையில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் மாவு சலிக்கும் சல்லடையில் ஒரு மஸ்லின் துணியை விரித்துக்கொண்டு, அதில் அரைத்து வைத்த பொடியை போட்டு ஒரு கரண்டியால் தட்டி தட்டி சலிக்கவும். கீழே உள்ள நியூஸ் பேப்பரில் விழக்கூடிய மிருதுவான பொடியை காற்றுபுகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
இதுதான் இயற்கை முறை டால்கம் பவுடர். இதை குழந்தையிலிருந்தே உபயோகிக்கும்போது, வளர்ந்த பிறகும் சருமம் மிருதுவாகவும், சரும நோய்கள் வராமலும் இருக்கும்.

வாசனை பவுடர்...


ரோஜா இதழ்கள் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டப்பட்ட தண்ணீரை  சிறிதளவு எடுத்து, அரைத்து வைத்துள்ள பவுடரில் தெளித்து நிழலில் உலர்த்தி எடுத்தால் வாசனைமிகுந்த டால்கம் பவுடர் தயார். ரோஜாவிற்கு பதில் மல்லிகை பூக்களையும் உபயோகிக்கலாம்.

இதை பெரியவர்கள் குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் முகத்திற்கு உபயோகிக்கலாம். இது முகத்தின் மீது மேக்கப்போட்டது போன்ற தோற்றம் இல்லாமல், சரும நிறத்திலேயே இருக்கும். அதே சமயம் முகத்திற்கு 'பளிச்' பொலிவைத் தரும்.

Monday, February 8, 2016

மூக்கில் இரத்தம் வருவது குறைய !

தேவையான பொருட்கள்:
வெங்காயம்.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோலை நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

மூக்கால் இரத்தம் வடிதல் (Epistaxis) !!!

மூக்கால் இரத்தம் வடிவது என்பது எல்லோரையும் மிகவும் பயமுறுத்துகிற விடயம்தான். ஆனால் மிகப் பெரும்பாலும் அது பயப்படக் கூடியதோ, மரணத்திற்கு இட்டுச் செல்வது போல ஆபத்தானதோ இல்லை.
மூக்கால் ஏன் இரத்தம் வடிகிறது?
எமது மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
அத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.
மூக்கைக் குடையும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
இருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.
பொதுவாக குளிர் காலத்தில் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் வரண்டு சிலநேரங்களில் வெடிப்பதைப் போன்றதே இதுவும்.
குளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவது அதிகம். எனவே தடிமன் வருவதும் அதிகம் இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
ஏனைய காரணங்கள்
தடிமன், சளி போன்ற கிருமித்தொற்று நோய்கள்
ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு ஒழுகல் (Allergic Rhinitis)
மூக்கு அடிபடுதல், காயம், மூக்கு குடைதல்
அதீத மதுப் பாவனை
உயர் இரத்த அழுத்தம்
குருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகளான அஸ்பிரின, குளபிடோகிரில் போன்றவை
கட்டிகள், சவ்வுகள் போன்றவை
மேலே காட்டிய Cutanneous horn என்பது வரட்சியான ஒரு வகை தோல் வளர்ச்சி. ஆயினும் இதுவும் அதிகம் காணப்படும் நோயல்ல.
நீங்கள் செய்யக் கூடிய முதலுதவி
காரணம் எதுவானாலும் அது மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டியதாகும்.
ஆனால் மருத்துவரைக் காணு முன்னரே முதலுதவி மூலம் நீங்களே மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை நிறுத்த முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மூக்கு எலும்பிற்கு கீழே இருக்கும் மூக்கின் மென்மையான பாகத்தை உங்கள் பெருவிரலினாலும் சுட்டு விரலினாலும் அழுத்திப் பிடியுங்கள். அவ்வாறு செய்யும்போது மூக்கின் அந்தப் பகுதியை பிற்பறமாக முகத்து எலும்புகளோடு சேர்த்து அழுங்கள்.
இவ்வேளையில் சற்று முன்புறமாகச் சாய்ந்திருப்பது நல்லது. மாறாக பிற்புறமாகச் சாயந்தால் வழியும் இரத்தம் தொண்டை. சைனஸ் போன்றவற்றுக்குள் உள்ளிட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடக் கூடும்.
அவ்வாறு தொடரந்து 5 நிமிடங்களுக்கு அழுத்திப் பிடியுங்கள். கையை எடுத்தபின் தொடர்ந்து இரத்தம் வந்தால் மேலும் 5 நிமிடங்களுக்கு அவ்வாறு செய்யுங்கள்.
அமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.
மூக்கிற்கு மேலும் கன்னங்களிலும் ஐஸ் வைப்பதும் இரத்தம் பெருகுவதைக் குறைக்கும்.
மீண்டும் வடிவதைத் தடுப்பது எப்படி?
இப்பொழுது இரத்தம் வருவது நின்றாலும் கவலையீனமாக இருந்தால் திடீரென மீண்டும் ஆரம்பமாகலாம். அதைத் தடுக்க வழி என்ன?
மூக்குச் சீறுவதைத் தவிருங்கள். அதே போல மூக்குக்குள் விரலை வைத்துக் குடைய வேண்டாம். வேறு எந்தப் பொருளையும் கூட மூக்கிற்குள் வைக்க வேண்டாம்.
தும்முவது கூடாது. தும்ம வேண்டிய அவசியம் நேர்ந்தால் வாயைத் திறந்து வாயினால் காற்று வெளியேறுமாறு தும்முங்கள்.
மலங்கழிப்பதற்கு முக்குவது கூடாது. அதேபோல பாரமான பொருட்களை தம்மடக்கித் தூக்குவதும் மீண்டும் இரத்தம் கசிய வைக்கலாம்.
வழமையான உணவை உட்கொள்ளுங்கள். அதிக சூடுள்ள பானங்களை 24 மணி நேரத்திற்காவது தவிருங்கள்.
மூக்கால் வடிவதற்கு அதன் மென்சவ்வுகள் வரட்சியாக இருப்பதுதான் காரணம் என்றால் அதனை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு கிறீம் வகைகள் தேவைப்படலாம். மருத்துவ ஆலோசனையுடன் உபயோகியுங்கள்.
புகைத்தல்
புகைப்பவராயின் அதனைத் தவிருங்கள்.
மூக்கினால் இரத்தம் வடிவதை மேற் கூறிய முறைகளில் உங்களால் நிறுத்த முடியாவிட்டால் மருத்துவரை நாடுவது அவசியம்.
மிக அதிகளவு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலும், அல்லது களைப்பு தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ உதவி அவசியமாகும்.
இரத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு Nasal packing செய்வார்கள்.
ஆயினும் இதுவும் நீங்களாகச் செய்யக் கூடியது அல்ல. பயிற்சி பெற்றவர்களால் செய்ய வேண்டியது.
மிக அரிதாகவே மூக்கால் இரத்தம் வடிபவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டி நேரிடும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். பாதாம், பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, ஆற்றல் கிடைக்க நாம் நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.
நட்ஸ் சாப்பிட வேண்டும் என்பதைப் பத்திரிகைகள், இணைய தளங்கள்,சமூக வலைதளங்கள், மருத்துவர்கள் மூலமாகத் தெரிந்துகொள்ளும் பலர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் கொள்வது இல்லை. தினமும், 100 கிராம் முதல் கால் கிலோ வரைகூட சிலர் நட்ஸ் கொறிக்கின்றனர். இது தவறு. நட்ஸ் வகைகள் கலோரி நிறைந்தவை.
நட்ஸ் நல்லது என்பதைக் கேள்விப்பட்டு, ஒரே நாளில் நூறு கிராம் நட்ஸ் உண்பதும், பிறகு ஒரு மாதத்துக்கு நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது அல்ல. "தினமும் 20 கிராம் அளவுக்குச் சீராக நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது" என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஒரே நட்ஸ் வகையை மட்டும் 20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாகச் சேர்த்து, 20 கிராம் தினமும் சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.
சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும் நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணவு வேளைக்கும் அடுத்த உணவு வேளைக்கும் இடையில், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் நட்ஸ் சாப்பிடலாம். உதாரணமாக, ஒருவர் காலை 8 மணிக்கு காலை உணவையும், மதியம் ஒரு மணிக்கு மதிய உணவையும் சாப்பிடுபவராக இருந்தால் காலை 10 -11 மணி அளவில் நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
எதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?
இதில் ஒரு நாளைக்கு ஏதாவது ஒன்றிரண்டு அல்லது எல்லாவற்றையும் கலந்து 20 கிராம் என்ற அளவில் சாப்பிடலாம்.
பாதாம் - 4 முதல் 7 (எண்ணிக்கையில்)
வால்நட் - 3 முதல் 5 (எண்ணிக்கையில்)
பேரீச்சை - 1 -2 (நடுத்தர சைஸ்)
பிஸ்தா - அதிகபட்சம் 10 கிராம்.
உலர் திராட்சை - 10 (எண்ணிக்கையில்)
முந்திரி - 5 முதல் 7 (எண்ணிக்கையில்)
அப்ரிகாட் - 3 முதல் 5 (எண்ணிக்கையில்)
உலர் அத்தி - இரண்டு

முகப்பரு விரட்டும் திருநீற்றுப் பச்சிலை!

பூக்களுக்கு மணம் உண்டு. சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இதன் பயன்களும் பல!
* நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.
* இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
* காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
* முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும்.அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.
* பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
* 5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்.

இளமையை காக்கும் துளசி...இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.
மூலிகைகளின் அரசி!
‘துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல்லில் அலட்சியப்படுத்தும் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.
நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து!
மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர் வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண நடவடிக்கைகளில் காட்டுவதில்லை. ஆனால், இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும் காய்ச்சல் என எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், ஜப்பானியர்கள், என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ‘‘10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்’’ என்கிறது சித்த மருத்துவம்.
இருமலை இல்லாமல் செய்துவிடும்!
சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
ரத்த அழுத்தம் குறையும்!
இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். 'நீரிழிவு' என்ற சர்க்கரை நோய், 'ஒபிசிட்டி' என்ற உடல் பருமன், 'பிளட் பிரசர்' என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க, எத்தனை தூரம் ஓடினாலும், நடந்தாலும், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என ஊட்டச்சத்து குடித்த குழந்தைப் போல தொப்பை மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து எது எதையோ வாங்கி சாப்பிட்டும் பயனில்லை என புலம்புபவர்களுக்கான தீர்வும் துளசியிடத்தில் இருக்கிறது. துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.
தோல் நோய் தொல்லை, இனி இல்லை!
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
என்றும் இளைமை!
இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
உடலுக்கான கிருமிநாசினி!
துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. ஆனால், நாம் தான் பயன்படுத்துவதில் அக்கறைக்காட்டுவதில்லை. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது. ‘உடலில் வியர்வை வாடை போகவே மாட்டேங்குது’ என கவலைப்படுபவர்கள், குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால், வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.
மொத்தத்தில் துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.

மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய

நாட்டு வைத்தியம் மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.. வராம போனாலும் விபரீதம்தான். இதுக்கு மூலிகை வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு.. கேட்டுக்கிடுங்க..
ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய.. அம்பது கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடிச்சி.. அதோடகூட அம்பது கிராம் பனைவெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதுல நெல்லிக்காய் அளவு எடுத்து, கால, மால ரெண்டு வேளைக்கு வாயில போட்டு தண்ணி குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு சீராயிரும். 100 கிராம் சதக்குப்பையை (நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும்) பொன் நிறமா வறுத்து.. அதோடகூட 100 கிராம் பனை வெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதையும் முன்னால சொன்ன மாதிரி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, தண்ணி குடிச்சி வந்தா மாதவிடாய்க் கோளாறு சரியாயிரும். மாதவிடாய்க் கோளாறோட வயித்துவலி, வயித்துப் புண் வந்து இம்சைப்படுத்தும். இதுக்கு, ரெண்டு கைப்பிடி குப்பைமேனிக் கீரையை எடுத்து வேக வச்சி கடைஞ்சி சாப்பிட்டு வந்தா வயித்துவலி, வயித்துப் புண்ணெல்லாம் விருட்டுனு ஓடிப் போயிரும். அதிக ரத்தப்போக்கை நிறுத்துறதுக்கு.. ரத்தப்போக்கால அவதிப்படுறவுங்களுக்கு அருமையான வைத்தியம் இது. காடு மேடுல அங்கங்க வெளைஞ்சி கெடக்குற நாயுருவி இலையை எடுத்துக்கணும். இதை நல்லா இடிச்சி 100 மில்லி அளவுக்கு சாறு எடுக்கணும். பிறகு, இதோட ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 3 நாளைக்குக் காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு உடனே சரியாயிரும். இதைக் குடிச்ச பிறகு ஒன்னரை மணி நேரம் கழிச்சித்தான் எதுவுமே சாப்பிடணும். வெள்ளைப்படுதல் நிற்க.. வெள்ளைப்படுதல் இருந்தா பொண் ணுங்களுக்கு பெரும் அவஸ்தைதான். 10 கிராம் வால்மிளகை எடுத்து பொடி பண்ணி வச்சிக்கணும். அதோடகூட 5 டீஸ்பூன் தேன் கலந்து தெனமும் ரெண்டு வேளை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தாப் போதும். வெள்ளைப்படுதல் முழுமையா குணமா கிடும். இதேபோல.. காய்ஞ்ச அசோகப்பட்டையை எடுத்து நல்லா இடிச்சிக்கணும். இந்தத் தூளை 10 கிராம் எடுத்து 200 மில்லி தண்ணியில போட்டு, 100 மில்லி ஆகுற அளவு கொதிக்க வச்சி இறக்கணும். இதுல 25 மில்லி எடுத்து தெனமும் ரெண்டு வேளை குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுதல் பூரணமா குணமாகிடும். நாட்டு வைத்தியம் மாதவிடாயின்போது பெண்கள் படற வேதனை சொல்லி மாளாது. வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல்னு அதுல எத்தனையோ கஷ்டம் இருக்கு. இதுக்கெல்லாம் நாட்டு வைத்தியத்துல நல்ல நிவாரணம் இருக்கு. பார்க்கலாமா.. வெள்ளைப்படுதல் வராம தடுக்க.. அஞ்சு ஆனைநெருஞ்சில் இலைகள எடுத்து, ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசறப்ப 'கொழ கொழ'னு வரும். இத காலையில வெறும் வயித்துல மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுறது சரியா போயிரும். இதைக் குடிச்சி 2 மணி நேரம் கழிச்சிதான் சாப்பிடணும். சாப்பாட்டுல புளி சேர்க்கக் கூடாது. நாக்குக்கு புளிப்பு வேணும்னா, தக்காளிய சேர்த்துக்கலாம். ஒரு கைப்பிடி கட்டுக்கொடி இலைய எடுத்து ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசுனா 'கொழகொழ'னு வரும். முன்னமே சொன்ன மாதிரி இதை காலைல வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். சாப்பாட்டுல புளிக் குப் பதிலா தக்காளி சேர்க்கலாம். வெள்ளைப்படுறது முழுசா குணமாகும். அத்திக்காயை துவரை.. இல்லைன்னா பாசிப்பருப்போட சேர்த்து கூட்டு செஞ்சி சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் சீக்கிரமே குணமாயிரும். ரத்தப்போக்கு நிக்கிறதுக்கு.. மேல்தோல் நீக்கிய நாவல்பட்டை (சிவப்பா இருக்கும்) 50 கிராம்.. (அ) அதே அளவுல அத்திப்பட்டை எடுத்து, அரை டம்ளர் அளவுக்கு சாறு வர்றவரைக்கும் தயிர் சேர்த்து இடிச்சிக்கணும். இதைக் காலையில வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். ரத்தப்போக்கு சட்டுனு நிக்கும். ஆனைநெருஞ்சில் இலைக்கு சொன்ன அதே பத்தியம்தான் இதுக்கும். மாதவிடாயின்போது வர்ற வயித்துவலிக்கு.. ஒரு கைப்பிடி மலைவேம்பு தழைய எடுத்து அதோடகூட தயிர் சேர்த்து அரை டம்ளர் சாறு வர்ற மாதிரி நல்லா இடிச்சிக்கணும். தொடர்ந்து இதை மூணு நாள் காலையில வெறும் வயித்துல குடிக்கணும். வயித்துவலி விருட்டுனு ஓடிரும். கன்னு போடாத கிடாரியோட கோமியம் 200 மில்லி எடுத்து, இதுகூட புளியங்கொட்டை அளவு உப்பு சேர்த்து காலையில வெறும் வயித்துல குடிக்கணும். மாதவிடாய் வந்த மூணாவது நாள் குடிச்சா வயித்து வலி சரியாயிரும். சரியாகலைன்னா அடுத்த மாசம் குடிக்கணும். இந்த வைத்தியம் வயித்து வலிய மட்டுமில்ல.. மஞ்சள்காமாலை நோயையும் குணமாக்கிரும்.
வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி ! மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, நாஞ்சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணிச் சாப்பிட்டா... எல்லா பிரச்னையும் பஞ்சா பறந்துடும். வெள்ளைப்படுதல் சரியாக... ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்-பட்டிருப்-பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணுநாள் குடிச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது. வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி, அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும். தாமதமான மாதவிடாய்... சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு தின்னணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும். மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து-தான். அதை மையா அரைச்சி நெல்லிக்-காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும். சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும். கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும். மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு... வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும். கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும். நாட்டு வைத்தியம் மாதவிடாயின்போது பெண்கள் படற வேதனை சொல்லி மாளாது. வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல்னு அதுல எத்தனையோ கஷ்டம் இருக்கு. இதுக்கெல்லாம் நாட்டு வைத்தியத்துல நல்ல நிவாரணம் இருக்கு. பார்க்கலாமா.. வெள்ளைப்படுதல் வராம தடுக்க..
அஞ்சு ஆனைநெருஞ்சில் இலைகள எடுத்து, ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசறப்ப 'கொழ கொழ'னு வரும். இத காலையில வெறும் வயித்துல மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுறது சரியா போயிரும். இதைக் குடிச்சி 2 மணி நேரம் கழிச்சிதான் சாப்பிடணும். சாப்பாட்டுல புளி சேர்க்கக் கூடாது. நாக்குக்கு புளிப்பு வேணும்னா, தக்காளிய சேர்த்துக்கலாம். ஒரு கைப்பிடி கட்டுக்கொடி இலைய எடுத்து ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசுனா 'கொழகொழ'னு வரும். முன்னமே சொன்ன மாதிரி இதை காலைல வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். சாப்பாட்டுல புளிக் குப் பதிலா தக்காளி சேர்க்கலாம். வெள்ளைப்படுறது முழுசா குணமாகும். அத்திக்காயை துவரை.. இல்லைன்னா பாசிப்பருப்போட சேர்த்து கூட்டு செஞ்சி சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் சீக்கிரமே குணமாயிரும். ரத்தப்போக்கு நிக்கிறதுக்கு.. மேல்தோல் நீக்கிய நாவல்பட்டை (சிவப்பா இருக்கும்) 50 கிராம்.. (அ) அதே அளவுல அத்திப்பட்டை எடுத்து, அரை டம்ளர் அளவுக்கு சாறு வர்றவரைக்கும் தயிர் சேர்த்து இடிச்சிக்கணும். இதைக் காலையில வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். ரத்தப்போக்கு சட்டுனு நிக்கும். ஆனைநெருஞ்சில் இலைக்கு சொன்ன அதே பத்தியம்தான் இதுக்கும்.
மாதவிடாயின்போது வர்ற வயித்துவலிக்கு.. ஒரு கைப்பிடி மலைவேம்பு தழைய எடுத்து அதோடகூட தயிர் சேர்த்து அரை டம்ளர் சாறு வர்ற மாதிரி நல்லா இடிச்சிக்கணும். தொடர்ந்து இதை மூணு நாள் காலையில வெறும் வயித்துல குடிக்கணும். வயித்துவலி விருட்டுனு ஓடிரும். கன்னு போடாத கிடாரியோட கோமியம் 200 மில்லி எடுத்து, இதுகூட புளியங்கொட்டை அளவு உப்பு சேர்த்து காலையில வெறும் வயித்துல குடிக்கணும். மாதவிடாய் வந்த மூணாவது நாள் குடிச்சா வயித்து வலி சரியாயிரும். சரியாகலைன்னா அடுத்த மாசம் குடிக்கணும். இந்த வைத்தியம் வயித்து வலிய மட்டுமில்ல.. மஞ்சள்காமாலை நோயையும் குணமாக்கிரும்

தண்ணீர் சிகிச்சை !!!

1. பல் துலக்குவதற்கு முன், காலையில் எழுந்ததும் 160 ml, டம்ளர் x 4 டம்ளர் குடிக்கவும்.
2. பிறகு பல் துலக்கவும், வாய் கொப்பளிக்கவும், பிறகு 45 நிமிடம் எதுவும் சாப்பிடக்கூடாது. குடிக்க வும் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பிறகு ஏதாவது குடிக்கலாம்.
4. 15 நிமிடங்களுக்குப் பிறகு ஃடிபன் சாப்பிடலாம்.
5. காலை, மதியம், இரவு_டிஃபன், லஞ்ச், டின்னர் முடித்த பிறகு 2 மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.
6. வயதானவர்கள், நோயாளிகள், மேலும் ஒரே சமயத்தில் 4 டம்ளர் தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் ஆரம்பத்தில் ஒரு டம்ளர், பிறகு 2 டம்ளர் என படிப்படியாக அளவை உயர்த்திக் கொள்ளலாம்.
7. மேற்கண்ட சிகிச்சை பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தும்.
தண்ணீர் சிகிச்சை மூலம்
1. உயர் ரத்த அழுத்தம்- 30 நாட்களில் குணமாகும்.
2. கேஸ்ட்ரபுள் (வாயுக்கோளாறு) - 10 நாட்களில் குணமாகும்.
3. சர்க்கரை நோய் - 30 நாட்களில் குணமாகும்.
4. மலச்சிக்கல் (அடிக்கடி) - 10 நாட்களில் குணமாகும்.
5. கேன்ஸர் - 180 நாட்களில் குணமாகும்.
6. TB (டிபி) - 90 நாட்களில் குணமாகும்.
7. ARTHRITIS பேஷண்ட்ஸ் இந்த தண்ணீர் சிகிச்சையை முதல் வாரத்தில் 3 நாள், மேலும் 2 வாரத்தில் தினமும் மேற்கொள்ளலாம்.
தண்ணீர் சிகிச்சையில் பக்க விளைவுகள் கிடையாது. ரெகுரலாக யூரின் போவதை விட இந்த சிகிச்சையால் யூரின் போகும் அளவு அதிகமாகும். உதாரணமாக ஒருநாளைக்கு 6 முறை நீங்கள் யூரின் போனால் தண்ணீர் சிகிச்சையில் அது 8 முறை ஆகும். வேறு எந்த பக்கவிளைவும் இல்லை. இந்த சிகிச்சைப்படி தினமும் தண்ணீர் குடித்து வந்தால் உங்களுக்குப் பழகிவிடும். அது ஒரு தினப்படி நிகழ்ச்சியாக மாறிவிடும். தினமும் தண்ணீர் குடியுங்கள். மேலும் ஆக்டிவாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள். சீனர்களும், ஜப்பானியர் களும் குளிர்ந்த நீர் (Coldwater) அருந்துவதில்லை. வெந்நீரே குடிக்கிறார்கள். சாப்பிடும்போது சூடான டீ மட்டும் சேர்க்கின்றனர். நாமும் அதைப் பின்பற்றினால் நிறைய பயன் உண்டு. இழப்பதற்கு எதுவுமில்லை. அனைத்தும் லாபமே.

நுரையீரல் கவசம் !!!

சித்தரத்தை-10 கிராம்,
ஓமம்-10 கிராம்,
கடுக்காய் தோல்-10 கிராம், 
மிளகு-10 கிராம்
திப்பிலி-10 கிராம்,
அக்ரகாரம்-10 கிராம்,
தாளிசாப்பத்திரி-10 கிராம்,
சர்க்கரை-40 கிராம்.
செய்முறை-
இவைகளை இடித்து ஒன்றாக சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு கால் டீஸ்பூன் வீதம் காலை மாலை உணவுக்குப்பின் சாப்பிட நுரையீரல் சம்பந்தமான எல்லாப்பிரச்னைகளும் விலகும். நுரையீரலுக்கு கவசமாகவும் இது விளங்கும்.

எளிதாக எவ்வாறு மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது ?

புகை
பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை,
தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை
பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும்
உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள்
சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர்,
மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது
அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.
✔ சுத்தம்
செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது
குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய
நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள்,
வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை
குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக
பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை
கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை
சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை
பயக்கும்.
✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட்
சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு
சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து
காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
✔ இரவு படுக்கபோகும் முன்பு 400
மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும்.
பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின்
உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை
உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள்
சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை
கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.
✔ இதை மூன்று நாட்கள்
கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும்.
குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.
அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை
யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான
போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும்.
இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

தலை முடிக்கான ஹென்னாவை எப்படி தயாரிப்பது?

தலை முடிக்கு ஹென்னா போடும்போது, அதனுடன் வேறு ஏதேனும் கலந்து போட வேண்டுமா? தலைக்கு ஹென்னா போடும்போது வெறும் ஹென்னாவை மட்டும் போட்டால் முடி சாஃப்ட்டாக இருக்காது.
250 கிராம் ஹென்னாவுடன், ஆம்லா பவுடர்-100 கிராம், வெந்தயப் பொடி-50 கிராம், முட்டை-1, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-2 டீஸ்பூன், தயிர்-½ கப், டீ டிகாஷன்-4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு-8லிருந்து 10 சொட்டுக்கள் சேர்த்து சிறிது தண்ணீரும் கலந்து முதல் நாள் இரவே ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.
தலை முடியில் லேசாக எண்ணெய் தடவிய பின்னர், கலந்து வைத்த இந்த மிக்ஸை தலை முடியில் முழுவதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும். முடியில் கலர் வந்த பின்னர் வாஷ் பண்ணலாம். முடியில் கலர் வராவிட்டால் மேலும் அரை மணி நேரம் விட்டு கலர் வந்த பின்னர் முடியைக் கழுவலாம். இப்படிச் செய்து வந்தால் முடி சாஃப்ட்டாக அழகாக இருக்கும்.

வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி குறிப்பு !

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ 
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) -100 கிராம்
எலுமிச்சைதோல் (காய வைத்தது.பொடுகை நீக்கும்-15 பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப்
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை.

மூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்..!

அருகம்புல் பவுடர் :
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பவுடர் :
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
கடுக்காய் பவுடர் :
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பவுடர் :
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பவுடர்:
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் பவுடர் :
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பவுடர் :
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பவுடர் :
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பவுடர் :
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பவுடர் :
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பவுடர்:
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பவுடர் :
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை பவுடர்:
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்
நீங்கும்,
ஜாதிக்காய் பவுடர்:
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பவுடர்:
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பவுடர்:
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பவுடர்:
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பவுடர்:
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பவுடர்:
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
வேப்பிலை பவுடர்:
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பவுடர்:
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பவுடர்:
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பவுடர்:
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பவுடர்:
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பவுடர்:
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியாநங்கை பவுடர்:
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பவுடர்:
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பவுடர்:
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
கோரைகிழங்கு பவுடர்:
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பவுடர்:
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பவுடர்:
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பவுடர்:
ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பவுடர்:
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பவுடர்:
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பவுட்ர்:
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
வாழைத்தண்டு பவுடர்:
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பவுடர்:
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பவுடர்:
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பவுடர்:
பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.
சுக்கு பவுடர்:
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடாதொடை பவுடர்:
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பவுடர்:
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பவுடர்:
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பவுடர்:
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பவுடர்:
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு
சிறந்தது.
நெருஞ்சில் பவுடர்:
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பவுடர்:
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும்,
உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பவுடர்:
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பவுடர்:
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பவுடர்:
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பவுடர்:
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பவுடர்:
கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பவுடர்:
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
நன்றி: நாவலன் தீவு வலைப்பூ
தற்போது தமிழ் மருந்துகடைகளில் எல்லா வித மூலிகை பொடிகளும் கிடைக்கின்றன...நமக்கு தேவையான பொடிகளை வாங்கி உபயோகித்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் . வாழ்த்துக்கள் !

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் !!!

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே
மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடை
கின்றனர் என்பது உண்மை.ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில்
வளம் பெறலாம்.
செய்முறை :
1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்
இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில்
இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.
உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும்.இதே போல்
தினமும் உண்டு வர வேண்டும்.
ஒன்றிரண்டு மாதங்களில் மறதி,மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும்.
மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல்
காப்பாற்றும்.

நம்ம மண்ணு நம்ம மருந்து - சீரகம் !!!

நம் இல்லங்களில் சமையல் அறையில் இடம் பெற்றுள்ள முக்கிய பொருள்களில் சீரகமும் ஒன்று.
நம் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். சிறுபிள்ளைகள் இல்லாத வீடு வீடல்ல, சீரகம் இட்டு சமைக்காத கறி, கறி அல்ல என்று.
இதிலிருந்து சீரகத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
சித்த மருத்துவத்தில் சீரகத்திற்கு தனி இடம் உண்டு.
சீர் + அகம் = சீரகம்
அதாவது அகத்தை சீர் செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயரானது.
சீரகத்தை அசை, சீரி, துத்தசாம்பலம், பிரத்திவிகா, பித்தநாசினி, மேந்தியம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil - Seerakam
English - Cumin seeds
Telugu - Jeela-kara
Malayalam - Jeerakam
Sanskrit - Jeeraka
Botanical Name - Cuminum cyminum
இந்தியா முழுவதும் சீரகம் பயிர்செய்யப் படுகின்றது. இதற்கு சிறந்த மணமுண்டு.
பித்மெனு மந்திரியைப் பின்னப் படுத்தியவன்
சத்துருவை யுந்துறந்து சாதித்து-மத்தனெனும்
ராசனையு மீவென்று நண்பைப் பலப்படுத்தி
போசனகு டாரிசெயும் போர்
(தேரன் வெண்பா)
சீரகம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. உற்சாகத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். நறுமணத்தையும், இன்சுவையையும் தரும். இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
குடற்புழு நீங்க
சீரகத்தை நன்கு பொடி செய்தோ அல்லது நன்கு வாயில்போட்டு மென்றோ சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.
வயிறு எரிச்சல் குறைய
சிலருக்கு வயிற்றில் எரிச்சல் உண்டாகும். எவ்வளவு உணவு உண்டாலும் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வயிறு எரிச்சல் குறையாது. அதிக வாய்வுள்ள பொருட்களை உட் கொள்வதாலும், அஜீரண பொருட்களை உட்கொள்வதாலும் இது ஏற்படுகின்றது.
இவர்கள் சீரகத்தைப் பொடி செய்து அதில் நீர்விட்டு பசைபோல் கலந்து வயிற்றின்மீது பற்று போட்டால் வயிற்றில் எரிச்சல், வலி போன்றவை குணமாகும்.
தேள்கடி விஷம் நீங்க
சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்.
மலச்சிக்கல் நீங்க
சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.
சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
சீரகத்துடன் பனங்கற்கண்டு கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த தேகம் வலுப்பெறும். உடலுக்கு புத்துணர்வும், தெம்பும் ஏற்படும்.
தலைவலி, வாந்தி மயக்கம் தீர
50 கிராம் சீரகத்தை 1 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி சீரகம் ஒடியும்நிலை வந்தவுடன் எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலையில் தேய்த்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். தலைவலி, மந்தம், வாந்தி மயக்கம் தீரும்.
சீரக குடிநீர்
சராசரியாக ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும். தற்போது குடிநீர் சுத்தமானதாக கிடைப்பதில்லை. இதனால் பல வகையான நோய்கள் உண்டாகின்றது.
எனவே நீரை கொதிக்க வைத்து அருந்தவேண்டும். அப்படி கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால் சிறுநீரகக் கோளாறு, நீர் சுருக்கு, உடல் சூடு, தலைமுடி உதிர்தல், தாகம், ஜலதோஷம் போன்றவை நீங்கும். நீரினால் உண்டாகும் நோய்கள் ஏதும் நம்மை நெருங்காது. உடலில் உள்ள அசுத்த நீரை வியர்வை சுரப்பி வழியாக வெளியேற்றும். மலச்சிக்கல் தீரும்.
நல்ல குரல்வளம் பெற
சீரக தண்ணீர் நல்ல குரல்வளத்தைக் கொடுக்கக்கூடியது. இசைத்துறையில் உள்ளவர்கள், பாடகர்கள் சீரகம் கலந்த நீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். தொண்டைக்கட்டு, இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
பெண்களுக்கு
கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாறுடன் சீரகத்தூளைக் கலந்து அருந்தி வந்தால் வாந்தி குமட்டல் குணமாகும்.
குழந்தை பிறந்த சிறிதுநேரத்தில் தாய்க்கு சீரகத் தண்ணீர் கொடுத்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். மாதவிலக்குக் காலங்களில் அதிக இரத்தப்போக்கு, சீராக, சீரகம் சிறந்த மருந்தாகிறது.
அதிக மருத்துவக் குணம்கொண்ட சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆரோக்கியத்தைப் பெறலாம்

காக்காய் வலிப்பு நோய்க்கு மருந்து !!!

மருந்து –ஓன்று
வசம்பு சூரணம்
வசம்பு ......இருபது கிராம்
சுக்கு .....பத்து கிராம்
மிளகு.......... பத்து கிராம்
திப்பிலி ...... பத்து கிராம்
கடுக்காய் .. பத்து கிராம்
பெருங்காயம் .......... பத்து கிராம்
உப்பு ..............கால் தேக்கரண்டி
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்
இந்த வசம்பு சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து
அளவு தேனில் கலந்து குழைத்து
தினமும் ஒருவேளை
உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்
சாப்பிட்டு வர
படிப்படியாக நோய் கட்டுக்குள் வந்து
இருபத்தி நான்கு நாட்கள்
அதாவது அரை மண்டலத்தில்
முழுமையான குணம் அடையலாம்
குறிப்பு
நாட்டு மருந்துக் கடைகளில் வசம்பு தூள் கிடைக்கிறது
சுக்கு மிளகு திப்பிலி தூள் சம அளவு கலந்து திரிகடுகு சூரணம் என்ற பெயரில் கிடைக்கிறது
கொட்டை நீக்கிய கடுக்காய் தூள் கிடைக்கிறது
அதை வாங்கி வந்து
வசம்பு தூள் ---இருபது கிராம்
திரிகடுகு சூரணம் ..முப்பது கிராம்
கடுக்காய் தூள் .. பத்து கிராம்
பெருங்காயம் தூள் .......... பத்து கிராம்
உப்பு ..............கால் தேக்கரண்டி
ஆகியவற்றைக் கலந்து சூரணம் ஆக செய்து வைத்துக் கொள்ளலாம்

மருந்து..இரண்டு
வசம்பு தூள்
வல்லாரைத் தூள்
வெந்தயம் அரைத்த பொடி
கஸ்தூரி மஞ்சள் தூள்
திப்பில் பொடி
ஆகிய ஐந்து பொடிகளையும்
சம அளவு
ஒன்றாகக் கலந்து
சூரணமாக்கி வைத்துக் கொண்டு
இந்த சூரணத்தில்
ஒரு விரற்கடை அளவு எடுத்து
தேனில் குழைத்து
தினம்
காலை
மாலை
இரண்டு வேளையும்
சாப்பிட்டுவர
வலிப்பு நோய்
அதனால் ஏற்படும் காய்ச்சல்
உடல் சூடாகுதல்
தலைவலி
ஆகிய பக்க விளைவுகளும் சரியாகி
நோய் முழுமையாக குணமாகும்
மருந்து மூன்று
மேற்கூறிய மருந்துகளுக்கு துணை உணவாக
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை
கீழ்க்கண்ட பாசிப் பயறு கசாயம் குடித்து வரலாம்
நூறு மில்லி கொதிக்கும் நீரில்
பாசிப் பயறு ( தோலுடன் ) ஒரு தேக்கரண்டி
சோம்பு என்ற பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி
மல்லித் தழை ஐந்து கிராம்
போட்டு
நன்கு கொதிக்க விட்டு
ஐம்பது மில்லியாக சுருங்கிய தீநீராக்கி
இறக்கி
வடிகட்டி
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குடித்து வர
நரம்புத் தளர்ச்சி நீங்கும்
இது கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

சின்ன வெங்காயத்தின் பெரிய மருத்துவகுணம். ..!!!

பெயர் சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து
அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.
வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல்
வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால்
பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்ட
பின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும். வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த
சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி
குடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும். பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.
காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.

குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட !!!

குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும். பாதாம் பருப்பு - 2, முந்திரி பருப்பு - 2, பேரிச்சை - 2, உலர்ந்த திராட்சை - 4, இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

கை நடுக்கம்:-மருத்துவ டிப்ஸ்

கை நடுக்கம்:
காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.
வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

தேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு !!!

இன்று ஒரு மருத்துவக் குறிப்பு, அதுவும் ஒரு அழகுக் குறிப்பு!
ஆணோ,பெண்ணோ முக அழகை பராமரிக்கவும், அதை மேலும் மெருகூட்டவும் தங்களால் ஆன மட்டில், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இதில் யாரும் விதிவிலக்கில்லை.இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் காலம் காலமாய் கொழித்துக் கொண்டிருக்கின்றனர். மிகச் சாதாரணமான கிடைக்கக் கூடிய நமது இயற்கை பராமரிப்பு முறைகளுக்கு இன்று மதிப்பில்லை. அதனையே அழகாய் ஒரு பொட்டலமாய் போட்டு சந்தைப் படுத்தினால் கண்னை மூடிக் கொண்டு வாங்கி பயன் படுத்துகிறோம்.
நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்கிறோம். இதற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் செலவு பிடித்தவை. தேமலை போக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் இதற்கு முன் வைக்கப் பட்டிருக்கிறது. இவை எல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என முந்தைய தலைமுறையோடு பெயரில் முடங்கிப் போய் விட்டது. இதனால் நம்மில் பலருக்கு இதன் மகத்துவமே தெரியாமல் போய்விட்டது.
இந்த தேமலை தமிழ் வைத்தியத்தில் “மங்கு” என அழைக்கின்றனர். இதனை போக்கிட ஒரு எளிய மருத்துவ குறிப்பு தேரையரின் பாடலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு...
கொள்ளவே யரிதாரப் பளிங்கு மாகுங்
குறையாமல் பலமரைதான் நிறையோர் கட்டி
உள்ளவே நற்கோவை ரசத்தை வாங்கி
உறவாக யிழைத்து வழித்தெடுத்துக் கொண்டு
மெள்ளவே ஐந்திருநாள் யிருபோதுந் தான்
விளங்கவே அடுத்தடுத்துப் பூசும்போது
துள்ளவே திருமுகத்தில் படரும் வங்கும்
தொந்தித்து நில்லரிது துலைந்து போமே.
இந்தப் பாடல் தேரையரின் மருத்துவ காவியம் என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. இதன் படி சருமத்தில் உண்டாகும் தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட இந்த குறிப்பைத் தருகிறார்.
அரிதாரம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். பளிங்கு போல தோற்றமளிக்கும் இது கட்டியாகவும் தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியான அரிதாரம் ஒரு அரைப் பலம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் கோவைக்காயின் சாறு விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை, மாலை) என பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர அவை அனைத்தும் மறைந்து சருமம் அழகாயிருக்கும் என்கிறார்.
பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்... தேவையுள்ளோருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.

ஒற்றைத் தலைவலி

சிலருக்கு, சூரியன் உதயமாகும்போது ஒற்றைத் தலைவலி ஆரம்பித்து, சூரியன் மறையும்போது வலி குறையும். இதனை ‘சூரியவர்த்தம்’ என்பர். அதுபோல், சிலருக்கு இரவில் தலைவலி வந்து, விடியற்காலையில் குறையும். இதனை ‘சந்திரவர்த்தம்’ என்பர். இதனைச் சரிசெய்ய, ‘தைவேளை’ எனும் மூலிகையைக் கசக்கி, எந்தப் பகுதியில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பகுதியில் உள்ள காதில், பஞ்சு போல உருட்டிவைத்தால், தலைவலி சரியாகும். வலி சரியானதும் இலையை எடுத்துவிடலாம்.

தீக்காயம் ஏற்பட்டால் தேனைத் தடவ வேண்டும் !

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவவேண்டும். தேனுக்கு காயத்தை ஆற்றும் தன்மையும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகம் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.

மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா?

தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதுதான் கெடுதல்.

அழகு குறிப்புக்கள் !!!

1. முடி அடர்த்தியாக வளர
அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.
2. வளமான தலைமுடிக்கு:
தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி
கொட்டுவதையும் நிறுத்தும்.
3. முடி கொட்டுவது நிற்க:
ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து
தலை குளித்து வரவும்.
4. கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:
அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
5. பாத வெடிப்பு:
தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.
6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:
தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை
நீங்கி தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும். இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.
7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு face pack!
தேவையான பொருள்கள்:
பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.
மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால் மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உபயோகிக்கலாம்.

பேன், பொடுகு தொல்லை நீங்க

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். இதனால் பேன் தொல்லை குறையும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.
50 கிராம் உப்பு கலக்காத வேப்பம்பூவுடன் 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
தலை முடி செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். பின்னர் முடி செழித்து வளரும்.
முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
பல் கரை மறைய
உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள் பளிச்சென ஆகும்.
முகம் சிகப்பழகு பெற
பாலில் ஒரு ஸ்பூன் கசகசாவை இரவில் போட்டு ஊரவைத்து காலையில் மையாக அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் சிகப்பாக மாறும்.
கூந்தல் பளபளக்க.
சிறிது சாதம் வடித்த கஞ்சியில்
ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில்
தேய்த்து குளித்துப் பாருங்கள்
எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு
நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
முகம் பளபளப்பாக
ஒரு வாழைப்பழம், ஒரு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். அரைமணி நேரத்திற்கு பின் குளிர்ந்த நீரீல் கழுவி துடைக்க முகம் மிகவும் பளபளப்பாகவும் பொலிவாகவும் காணப்படும்

வயிற்றுப்புண் - அல்சர் - புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி!!!

முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்தோமில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு.
ஆயினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. வெண்ணிற முள்ளங்கி யானையின் தந்தத்தைப் போன்றதாய் நீண்டும் பெரியதாய் காணப்படும். சிறுமுள்ளங்கி கார்ப்புச் சுவையும், உஷ்ணத் தன்மையும் கொண்டு இருக்கும். இது உணவுக்கு சுவையூட்டும். குரலை செம்மைபடுத்தும். வாத, பித்த சிலேத்துமம் எனப்படும் மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும்.
பெரு முள்ளங்கி வறட்சித் தன்மையும், குரு குணமும், வாயுத்தன்மையும் உடையது. இது மூன்று தோஷங்களையும் வளர்க்கக் கூடியது. இதை சமையலுக்கு உபயோகப்படுத்தும் முன்பு எண்ணெயிலிட்டு வதக்கிய பின் உபயோகப் படுத்தினால் மூன்று தோஷங்களையும் தணிக்க வல்லது. மஞ்சள் முள்ளங்கி இனிப்பு சுவையும், உஷ்ணமும், இலகுத் தன்மையும், உஷ்ண வீரியமும் கொண்டிருக்கும். சடராக்கினியை வளர்க்கும் மலத்தை தடுக்கும்.
சுப வாதங்களைத் தணிக்கும். முதிர்ந்த முள்ளங்கியை விட இளம் முள்ளங்கியே நன்மை தருவதாக இருக்கும். முதிர்ந்த முள்ளங்கி வீக்கத்தையும், அழற்சியையும் தோற்று விக்கும். ரத்தத்தை கெடுக்கும். உலர்ந்த முள்ளங்கி 3 தோஷங்களையும், நஞ்சையும் போக்கவல்லது. முள்ளங்கி காய்ச்சல், இழுப்பு, மூக்கு, கண், தொண்டையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றையும் போக்கும்.
முள்ளங்கிக் கஞ்சி வாயில் எச்சில் ஒழுகுதல், தொண்டை கரகரப்பு, தொண்டை அடைப்பு, நாவின் சுவையின்மை, பீநசம், இருமல், கப நோய்கள் ஆகியவற்றைத் தணிக்கும். முள்ளங்கியின் பூ கப பித்தங்களைத் தணிக்கும். முள்ளங்கியில் புற்று நோயைத் தடுக்க வல்ல மருத்துவப் பொருட்கள் மலிந்துள்ளன.
பண்டைக் காலந்தொட்டு ஈரல் நோய்கள் வந்த போது அதைப் போக்குவதற்கும் மேலும் வராது தடுப்பதற்கும் முள்ளங்கியை உண்பது என்பது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கந்தகச்சத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மருத்துவ வேதிப்பொருட்கள் முள்ளங்கியில் அடங்கியுள்ளன. அவை பித்த நீரை ஒழுங்காக சுரக்க உதவுகின்றன.
இதனால் முள்ளங்கி ஆரோக்கியமான பித்தப்பை க்கும் ஈரலுக்கும் உதவுவதோடு செரிமானத்தையும் சீர்படுத்துகிறது. புதிய முள்ளங்கிக் கிழங்கில் மிகுதியான விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. முள்ளங்கி கிழங்கை விட முள்ளங்கி இலையில் 6 மடங்கு விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. மேலும் முள்ளங்கி கீரையில் மிகுதியான சுண்ணாம்புச் சத்தும் உள்ளது.
மேலை நாடுகளில் பன்னெடுங்காலமாக முள்ளங்கி சாறு இருமலைத் தணிப்பதாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும், பித்தப்பை சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் முள்ளங்கிச் சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும் நெஞ்சகக் கோளாறுகளிலிருந்து நிம்மதி பெறவும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது.
முள்ளங்கி விதைகள் வயிறு நிரம்ப இருப்பது போன்ற நிலையிலும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு புளிப்புடன் நாம் உண்ணும் உணவு நீண்ட நேரத்துக்குப் பிறகு செரிமானம் ஆகாமல் மேலெதிர்த்து நெஞ்சுக்கு வருவது போன்ற நிலையிலும், உண்ட உணவு சீரணமாகாமல் வயிற்றுப் போக்கை உண்டாக்குகிற போதும், நெஞ்சுக் கோழை அதிகரித்து இருமல் மற்றும் மூச்சிரைப்பு ஏற்படுகிற போதும் சிறந்த நிவாரணத்தை அளிக்க வல்லது.
* முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.
* முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும்.
* 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும்.
* கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவை யின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும்.
* அந்தி, சந்தி என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து பருகுவதால் மூலநோய்கள் குணமாகும். இளம் முள்ளங்கி கீரையின் சாற்றை எடுத்து மெல்லிய துணியால் வடிகட்டி அதில் போதிய சர்க்கரை சேர்த்து அருந்திவர மஞ்சள் காமாலை குணமாகும்.
ஒரு தேக்கரண்டி முள்ளங்கி கிழங்குச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்து சாப்பிட இருமல், நெஞ்சக கோளாறுகள், இதய வலி, வயிற்று உப்பிசம், தொண்டைப்புண், தொண்டைக் கட்டு ஆகியன குணமாகும். முள்ளங்கி விதையை நன்றாக இடித்த காடி சேர்த்து குழைத்தப் பசையாக்கி வெண்புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும்.
தினம் இப்படிச் செய்தால் நலம். இதையே படர் தாமரை, முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர நன்மை உண்டாகும். இளம் முள்ளங்கித் துண்டுகளுடன் காரட், பீட்ரூட் போன்றவற்றையும் துண்டுகளாக்கி ஒன்று சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு உடன் உப்பு சிறிது சேர்த்து சாலட் போல உணவுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு நன்மை தரும்.
உள்ளுறுப்புகள் பலம் பெறும். சிறுநீரக ஈரல் தொடர்பான நோய்கள் விலகும். கோடை காலத்தில் முள்ளங்கி சாற்றை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி பெறும். முள்ளங்கியை ஏதேனும் ஓர் வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும்.
அதில் அடங்கியிருக்கும் இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் மற்றும் அதிகப்படியான விட்டமின் சி சத்தும் நோயற்ற வாழ்வுக்கு வகை செய்கின்றன. வயிறு குடல் புண்பட்ட நிலையில் உள்ளவர்கள் மட்டும் முள்ளங்கியை தவிர்ப்பது நலம்.
சாதாரண உணவாகும் முள்ளங்கியில் உள்ள மருத்துவ நன்மைகளை கருத்தில் கொண்டு அடிக்கடி உணவில் சேர்ப்போம். உன்னத நலன்களைப் பெறுவோம்.
முள்ளங்கியில் அடங்கியுள்ள சத்துக்கள்
புதிதாக சேகரிக்கப்பட்ட 100 கிராம் முள்ளங்கியில் பின்வரும் சத்துக்கள் பொதிந்துள்ளன. உயிர்ச்சத்து 1சதவீதம், மாவுச் சத்து 3% புரதச்சத்து, முழுமையான கொழுப்பு 1%, உணவாகும் நார்ச்சத்து 4%, விட்டமின்களான ஃபோலேட்ஸ் 6%, நியாசின் 1.5% பெரிடாக்ஸின் 5.5%, ரிபோஃப்ளேவின் 3%, விட்டமின் ஏ 1%, விட்டமின் சி,
25%, விட்டமின் ஈ 9%, விட்டமின் கே1 %,ஆகியவையும் எலக்ட்ரோலைஸ் எனப்படும் நீர்ச்சத்துக்களான சோடியம் 2.5%, பொட்டாசியம் 5%, ஆகியவையும் தாதுப் பொருட்களான சுண்ணாம்புச்சத்து 2.5%, செம்புசத்து 5%, இரும்புசத்து 4%, மெக்னீசியம் 2.5%, மாங்கனீசு 2.5%, துத்தநாகம் எனப்படும் ஸிங்க் 2%, ஆகியவையும் மருத்துவ சத்துப் பொருட்களான பீட்டா கெரோட்டின் 4 மைக்ரோ கிராம், ஆல்பா கெரோட்டின் சிறிதளவும் லூட்டின் கசியாசாந்தின் 10% மைக்ரோகிராமும் அடங்கியுள்ளன.
முள்ளங்கியின் இலை, பூ, கிழங்கு விதை ஆகிய அத்தனையும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவது ஆகும். முள்ளங்கிக் கீரையில் வளிக்குற்றமும், தீக்குற்றமும் பெருகும். வயிற்றுப் புழு, மார்பு எரிச்சல் இவை உண்டாகும். ஆயினும் வயிற்று வலியையும் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணையும் இது போக்கக்கூடிய மருந்தாக அமையும்.
சிறு முள்ளங்கியை முற்றாத இளம் நிலையில் எடுத்து உண்பதால் பல நோய்களைத் தணிக்கும் என்று அகத்தியர் குணபாடநூல் தெரிவிக்கிறது. இளம் முள்ளங்கியை உணவாக சமைத்து சாப்பிடுவதால் வாதம் எனப்படும் வாயு சம்பந்தமான நோய்கள், காப்பான் எனப்படும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்றெரிச்சல்,
வயிற்று வலி, குத்தல், வயிற்றில் வாயு சேர்தல், எலும்பு உறுக்கி இருமல் சளித் தொல்லைகள், கடுமையான தலைநோய்கள், பல்சிலந்தி,பஇரைப்பு மூலக்கடுப்பு ஆகிய நோய்கள் அத்தனையும் முள்ளங்கியின் மணத்தை கண்ட போதே மிரண்டு ஓடி விடும். *முள்ளங்கி விதை ஆண்மையைப் பெருக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கவல்லது. மலத்தை இளக்க வல்லது. வெப்பத்தை தூண்டக் கூடியது. பசியைத் தூண்டக் கூடியது. வயிற்று நோய் களை விரட்ட வல்லது.